Heavy Rain Wayanad landslide : கேரளாவில் தென் மேற்கு பருவமழை காலம் என்றாலே அச்சமான நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் இயற்கை சீற்றத்தால் சிதைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 30தேதியன்று அன்று கேரளாவின் வயநாடு மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 318 பேர் உயிரிழந்தனர், 397 பேர் காயமடைந்தனர், மற்றும் 118 பேர் காணவில்லை என்று தகவல்கள் கூறப்படுகிறது. அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான குழந்தைகள் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது.